Monday, April 15, 2013

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமானம் 15 வருடங்களின் பின் கொழும்பை வந்தடைந்தது

பிரிட்டிஷ் எயார்வேஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று 15 ஆண்டுகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை பகல் 12.45 மணியளவில் இலங்கை, கட்டுநாயக்க விமானநிலையத்தை  வந்தடைந்தது.
லண்டனின் கெட்விக் (Gatewick) விமானநிலையத்திலிருந்து மாலைதீவுக்குச் சென்ற குறித்த விமானம் அங்கிருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளது.


ஜனாதிபதியின் தங்காலை இல்லத்தில் நடைபெற்ற புதுவருட கொண்டாட்டம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் சிங்கள புதுவருடத்தை நேற்று தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் கோலாகலமாக கொண்டாடினர்.
இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான  கோத்தபாய ராஜபக்ச குடும்பத்தினரும் பங்கேற்றார்.
எனினும் மற்றைய சகோதரர்களான சாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச இருவரும் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.

பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் காலமானார்

பழம்பெரும் திரைப்பட பின்னணிப் பாடகர் பி.பீ.ஸ்ரீனிவாஸ் தனது 82 ஆவது வயதில் சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் மிகவும் இனிமையான பாடல்களை அவர் பாடியிருக்கின்றார்.

அதேவேளை, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய 8 மொழிகளில் பாண்டித்தியம் பெற்றவராகவும் அவர் திகழ்ந்தார்.

இரசாயன பகுப்பாய்வுக்கான திகதி அறிவிக்கவில்லை: சரவணபவன் எம்.பி.

தாக்குதலுக்கு உள்ளான உதயன் பத்திரிகை அச்சிடும் பகுதியை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை என உதயன் பத்திரிகையின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

இலங்கைக்கு உதவியளிக்கையில் நிபந்தனைகள் விதிப்பதில்லை: இந்தியா

இந்தியா உதவிபெறும் நாடுகளின் இறைமைக்கு குந்தகம் விளைவிப்பதில்லை எனவும் தனது உதவிகளை கேட்கும் நாடுகளுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கும் போது எவ்விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான உதவியில் 20 வீதம் குறைப்பு: அமெரிக்கா

இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் 20 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி முன்மொழிந்துள்ளார்.

மனித உரிமைகள், மீள்கட்டுமானம், அரசியல் ஒன்றிணைவு ஆகியன தொடர்பாக உண்டாகியுள்ள கசப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் குறைப்பினை மேற்கொள்வதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Monday, April 8, 2013

167 அழைப்புக்களை மேற்கொண்டவருக்கு பிணை

ஓர் இளம் பெண்ணுக்கு தகுந்த காரணமின்றி 167 தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட இளைஞனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பெந்;தரவை சேர்ந்தவர் எனவும் இவர், குறித்த பெண்ணை தன்மீது காதல் கொள்ளச் செய்வதற்காக இரண்டு நாட்களுக்குள்  167 தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.