Monday, April 8, 2013

167 அழைப்புக்களை மேற்கொண்டவருக்கு பிணை

ஓர் இளம் பெண்ணுக்கு தகுந்த காரணமின்றி 167 தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்ட இளைஞனுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் பெந்;தரவை சேர்ந்தவர் எனவும் இவர், குறித்த பெண்ணை தன்மீது காதல் கொள்ளச் செய்வதற்காக இரண்டு நாட்களுக்குள்  167 தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.


இந்த அழைப்புக்களைப் பெற்ற பெண், இவரது அழைப்புக்கள் தனக்கு பெரும் தொல்லையை தருவதால் இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். பின்னர் இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

No comments: