Monday, April 8, 2013

றிசாத் எமது வேலையில் தலையிடுகிறார்: பாயிஸ்

அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளம் நகர அபிவிருத்தியில் தலையீடு செய்கின்றார் என புத்தளம் நகர சபை தலைவர் கே.ஏ.பாயிஸ் குற்றஞ்சாட்டினார்.

புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது புத்தளம் நகரில் வாராந்த சந்தை ஞாயிற்றுக்கிழமை மாற்றப்பட்டமை தொடர்பில் நகர சபை தலைவர் கருத்து தெரிவித்தார்.


இதன்போதே அமைச்சர் றிசாத் பதியுதீன் புத்தளம் நகர அபிவிருத்தியில் தலையீடு செய்கின்றார் என்ற குற்றச்சாட்டினை அவர் முன்வைத்தார்.

புத்தளம் நகரில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை புத்தளம் நகர சபை தூரநோக்குடன் செயற்படுத்த ஆரம்பித்துள்ள நிலையில் அபிவிருத்தி திட்டங்களினை சில அரசியல் இலாபங்களுக்காக தடைவிதிக்க முற்படுகிறார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வாராந்த சந்தையில் சிலர் வீடியோ கெமராவினை வைத்து கொண்டு வியாபாரிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையூறு செய்கின்றனர். இது தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தியுள்ளேன் என அவர் தெரிவித்தார்.

No comments: