ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் சிங்கள
புதுவருடத்தை நேற்று தங்காலையில் அமைந்துள்ள கால்டன் இல்லத்தில் கோலாகலமாக
கொண்டாடினர்.
இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச குடும்பத்தினரும் பங்கேற்றார்.
எனினும் மற்றைய சகோதரர்களான சாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச இருவரும் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.
இதன்போது, புதிதாக அடுப்பு எரித்தல்- உணவு உட்கொள்ளுதல், கொடுக்கல் வாங்கல் செய்தல் போன்ற பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்பட்டன.
அதன் பின்னர் தங்காலை மக்கள் வங்கிக்குச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொடுக்கல் வாங்கல் பாரம்பரியங்களைப் பின்பற்றினார்.
வீட்டு வளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாங்கன்று ஒன்றையும் நட்டினார்.
இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மனைவி சிராந்தி ராஜபக்ச, மகன்கள் நாமல், யோசித, றோகித, மற்றும் கோத்தாபய ராஜபக்ச, அவரது மனைவி, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்
இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச குடும்பத்தினரும் பங்கேற்றார்.
எனினும் மற்றைய சகோதரர்களான சாமல் ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச இருவரும் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளவில்லை.
இதன்போது, புதிதாக அடுப்பு எரித்தல்- உணவு உட்கொள்ளுதல், கொடுக்கல் வாங்கல் செய்தல் போன்ற பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்பட்டன.
அதன் பின்னர் தங்காலை மக்கள் வங்கிக்குச் சென்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொடுக்கல் வாங்கல் பாரம்பரியங்களைப் பின்பற்றினார்.
வீட்டு வளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மாங்கன்று ஒன்றையும் நட்டினார்.
இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, மனைவி சிராந்தி ராஜபக்ச, மகன்கள் நாமல், யோசித, றோகித, மற்றும் கோத்தாபய ராஜபக்ச, அவரது மனைவி, ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்
No comments:
Post a Comment